திங்கள், 8 பிப்ரவரி, 2016

காதில்  பொய் 


என்னிடம் நீ மறைத்த பொய் எல்லாம்
என்னை கொல்லுதே காலமெல்லாம் தீயாக

நீ செஞ்ச வினை என் நோக்கம் இல்லை
நீ செய்ததில் சத்தியமாய் தவறு இல்லை

கற்பு என்பது உடலில் இல்லை
காதல் என்பதும் கருத்தாய் இல்லை

உன் வார்த்தைகள் தான் என் வேதம்
உன் நல்வாழ்வே என் சுவாசம்

செத்து போன உன் நாட்கள் பற்றி
விட்டு போன உன் பொய்களால்
நித்தம் நித்தம் தடு மாற்றம் ..

உன் பொய்கள் தான் என்னை வாட்டுதே
தவிர உன் பழைய நட்புகள் அல்ல

எல்லாம் தெரிந்தும் உன் வார்த்தையில்
அது வர வேண்டிகிறேன்
தள்ளி நின்று பார்த்தால் இது வேடிக்கை - புரிகிறது
அன்பே உனக்கோ ரண வேதனை
என்ன செய்ய எனக்கோ மன வேதனை

தீரா காதல் கொண்ட காரணத்தால்
திரும்ப திரும்ப கேட்கிறேன்
என்றேனும் ஒரு நாள் சொல்ல எத்தனித்து இருப்பாய்
வேண்டாம் அன்பே அது வரை வாழ்கின்ற நாட்கள் எல்லாம்
பொய் ஆகி விடும் ..
சொல்லி விடு இன்றே - இல்லை
கொல்லி வை இன்று .....